ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

35 - சிகப்பு ரோஜாக்கள் | Sigapu Rojakkal - 1978

























பாரதிராஜாவின் 3வது படம், தமிழில். கிராமத்து கதைகளில் வெற்றிகண்ட பா.ரா, நகர்ப்புற களத்தில், சைக்கோ த்ரில்லரை கையாண்டு, மிகப்பெரிய வெற்றியை கண்ட படம் இது. 28, அக் 1978 அன்று வெளியாகி, 175 நாட்கள் ஓடியது. ராஜா இணை இயக்குநர் எனுமளவிற்கு அளவிற்கு படத்தின் ஆன்மாவாக பெரும்துணை புரிந்துள்ளார். பலநாட்கள் என் அன்றாட மாலைகளில் நான் விருப்பிக்கேட்க்கும் இசையாக இந்த பிண்ணனி இசை இருந்தது, இப்பொழுதும் கேட்டுக்கொண்டே தான் எழுதுகிறேன். 

படத்தின் முற்பகுதி முழுவதும் வரும் காதல் காட்சிகளை கிடார், பியானோவில் அற்புதமாக சிறைப்பிடித்திருப்பார். படத்தின் பாடல்களுக்கு செல்லும்முன், அந்த பின்னணி இசை சுட்டி உங்களுக்காக. https://www.youtube.com/watch?v=50pGKwCaT4E பாடல்களை காட்டிலும் சுவையான 22நிமிட இசையை நவீன் பிரித்தெடுத்திருக்கிறார். Vocal, Sax, Trumpet, Piano, Guitar கூட்டணியில் ஒரு கொண்டாட்டமான நகர்ப்புற இளைஞனின் மனநிலையை முதல் 10நிமிடங்களுக்கும் மேலான இசையில் உணரலாம். பாடலின் சிறுதுளி பாதிப்புமற்ற பின்னணி இசை. 10வது நிமிடத்தில் இசையின் நிறம் மாறுகிறது. ஒரு பரபரப்பு தொற்றுகிறது. ஏதோ ஒரு பயங்கரத்தை நமக்கு உணர்த்துகிறது. ட்ரம், தூரத்தில் ஒலிக்கும் குழல், மெல்ல இளகிய சூழலுக்கு மாறும் கிடார், திரும்ப பயமுறுத்தும் குழல் என ஒரு நாடகமே நடக்கிறது. 12.30ல் ஆரம்பமாகும் துரத்தல் இசை, இடையிடையே சோகத்தை தூவும் வயலின், மீண்டும் விரையும் டிரம், குழப்பமான synth ஒலிகள். 

இத்தனைக்கும் நடுவில், நாயகியின் குரலிசையில் ஒரு ராகம், குளிக்கும் ஒலி நீரை அளைப்பதில் புலப்படுகிறது. குழல் ஒரு சோகத்தை தாங்கி ஒலிப்பதை கவனியுங்கள். அவள் ஏகாந்தமாக பாடினாலும், அவளை பின் தொடரும் பயங்கரத்தை குறிப்புணர்த்துகிறது. ஒரு த்ரில்லர் சூழலுக்கான அனைத்து ஒலிக்குறிப்புகளுடன் நம்மை இருக்கையின் நுனிக்கு அழைத்துச்செல்கிறார். 19வது விநாடியில் ஆரம்பிக்கும் பயங்கர குரலிசை நம்மை பயத்தில் உறையவைக்கிறது, துரத்தும் ட்ரம், துயரத்திற்கு வயலின்.
https://www.youtube.com/watch?v=Yoo_WkRIgYU

இந்த பியானோ காதலன் ராஜா, இங்கிருந்து ஆரம்பிக்கிறார். Pure Jazz. படத்தில் இரண்டே பாடல்.

 இந்த மின்மினிக்கு | Intha Minminiku MVD-SJ  Kannadasan

Chimes நம் கவனத்தை கவரும் நொடி பீறிட்டு கிளம்புகிறது வயலின்.. (அந்த மணி ஒலி, படத்தில் பேருந்து நிறுத்த விளக்குகள், கார் நிறுத்த விளக்குகளுக்கு சேர்த்திருப்பார் பாரதிராஜா) முடிவில் கிடார் சேர அங்கிருந்து ரூ ரூ ரூ என சானகியம்மாவின் குரல், நமை பிடித்திழுத்து வானத்தில் ஏற்றுகிறது. துவக்க இசையில் தொலைந்த வயலின் மீண்டும் இடையிசையில் பரபரக்கிறது, கூடவே விசில் சத்தமும் சேர, சூழலின் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இணைப்பாடலின் இயக்கவிதிகளின் உச்சம். முடிவில் அந்தச்சிரிப்பு என்றென்றும் நம்முடன் இருக்கும். :) மாண்டாச் (Montage) - நனவோடை அமைப்பில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல்.

தான் சொல்ல நினைத்து சொல்லாமல் சென்ற இசைத்தேவைகளையும் அறிந்து, ராஜா இந்த படத்தின் பிண்ணனியை அமைத்திருந்ததாக பாராதிராஜா குறிப்பிட்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=Yoo_WkRIgYU

நினைவோ ஒரு பறவை | Ninaivo Oru Paravai Kamal-SJ Vaali

கமல், ராஜாவின் இசையில் பாடிய முதல் பாடல். துவக்க இசை இல்லை. ஹம்மிங் தான் பாடலின் முதல் கையெழுத்து, கனவில் நாயகி பாடலை ஆரம்பிக்க, நாயகன் எங்கிருந்தே வந்து மெதுவாக இணைகிறார் பாடலில். அந்த பா..பப..பாப...எங்கிருந்தோ ஒலிக்கும்.. நாயகியின் குரல் அளவிற்கு ஒலிக்காது, நாயகி கனவில் பாடுவாதால்.. பாடல் ஆரம்பித்தப்பின் அவர் மெதுவாக வந்து இணைகிறார். படத்திலும் இதை பா.ரா அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார். தூரத்திலிருது தெளிவற்ற உருவமாக துவங்கி மெதுவாக வடிவம் பெறுவார் நாயகன் கமல். நாயகின் ராகத்தை கலைக்காதவாறு அமைந்திருக்கும் அந்த பா..பபபா...ஒத்திசைவின் நாயகன் ராஜா!! இடையிசைக்கு பின்பு நாயகியும் அதே பா..பபபா என பாடுவார், நாயகனின் ராகத்துட்டன் ஒத்திசைந்து.

நினைவோ ஒரு பறவை... வாலி அவர்களின் அற்புத வரிகள். பனிக்காலத்தில் நான் வாடினால் உன்பார்வை தான் என் போர்வையோ!!
https://www.youtube.com/watch?v=ZR-3IoaON6g


https://www.youtube.com/watch?v=OHgX3KX5O2Y LKA Connection covered the title and extended theme of Sigappu Rojakkal in the name of RedRose. True to the soul of the theme. Like it very much. Hightligthing the nuances of the theme and giving us the flavor of their Jazz depth. Hope you enjoy the album and this 30min of BGMs. 

1 கருத்து:

  1. என்றாவது ஒரு நாள் பாரதிராஜா/ஆர்.டி.பர்மன் கூட்டணி என்ன தான் இந்தியில் செய்தது என்று கேட்க வேண்டும். (தோல்விப்படம் என்று தெரியும், ஒரிஜினல் கேட்டு இந்திக்காரர் அதிசயித்ததும் தெரியும், என்றாலும் முடிவில் என்ன தான் செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள சின்ன க்யூரியாசிட்டி.)

    எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை :-)

    பதிலளிநீக்கு